நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி
விண்ணில் உதித்த நிலவு மண்ணில் மலர்ந்ததோ... தாடகையில் பூத்த தாமரை தரையில் தவழ்ந்து வருகிறதோ... என கவிஞர்கள் பாடும் அழகும் திறமையும் அமையப்பெற்ற இவர், ஐ.டி., நிறுவன வேலையை உதறி விட்டு நீச்சலிலும், நடிப்பிலும் சாதித்து வருகிறார்.
டான்ஸர், கோச்சர், டிரெய்னர், ஆக்டர், ஆங்கர் என பல பரிமாணங்களில் ஜொலித்து வரும் இவர் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் நடிகை ஜனனி பிரபு.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவருடன் பேசியதிலிருந்து...
நெய்வேலி சொந்த ஊரு. அப்பா கோவர்த்தன் மத்திய அரசு ஊழியர். அம்மா சுசீலா குடும்பத்தலைவி. இங்கேயே பள்ளிப்படிப்பு முடித்தேன். ௨ம் வகுப்பு படித்த போது என்னையும், அண்ணனையும் பயிற்சியாளர் மூலம் நீச்சல் பயிற்சி பெற வைத்தார் அப்பா. இதனால் பள்ளி காலங்களிலேயே தேசிய நீச்சல் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வெல்ல முடிந்தது.
இன்ஜினியரிங் முடித்த கையுடன் சென்னையில் ஐ.டி., நிறுவன வேலை கிடைத்தது. சிறு வயதில் ஆங்கரிங், மாடலிங் ஆர்வம் இருந்தது. இதனால் ஐ.டி., நிறுவன பணியுடன் முன்னணி டிவி ஒன்றிலும் பகுதி நேரமாக ஆங்கரிங் செய்து வந்தேன். அதன் மூலம் மாடலிங் வாய்ப்பு கிட்டியது. 2018ல் மிஸ் சென்னை போட்டியில் பட்டம் பெற்றேன். அந்த பட்டம் தான் நினைத்தாலே இனிக்கும் சீரியல் வாய்ப்பை பெற்று தந்தது. அதில் நளினி கேரக்டர் சின்னத்திரையில் எனக்கென்று ஒரு இடத்தை வாங்கி கொடுத்தது. தற்போது பொன்னி சீரியலில் பவானி பாத்திரம் மக்களிடம் என்னை கொண்டு போய் சேர்த்திருக்கிறது. வெளியிடங்களில் மக்கள் பவானி என அழைப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
சீரியலுக்காக மாதத்தில் பாதி நாட்களை செலவிட வேண்டியிருக்கிறது. மீதமுள்ள நாட்களில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதோடு சிறுவர்கள், பெண்களுக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறேன். கணவர் பிரபு தனசேகர் நடத்தும் நிறுவனம் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு ஜூம்பா, டான்ஸ் பயிற்சியும் அளித்து வருகிறேன்.
2009ல் டான்ஸ் பயிற்சி பெற பிரபு தனசேகர் நிறுவனத்தில் சேர்ந்தேன். டான்ஸ் மீதிருந்த என் ஆர்வத்தை புரிந்து பயிற்சியளித்தார். அறிமுகம் நட்பாகி காதலில் முடிந்தது. 2011ல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது இரு குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர்.
சிங்கப்பூரில் நடக்கவுள்ள சர்வதேச நீச்சல் போட்டியில் மெடல் வெல்ல தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறேன். வெள்ளித்திரையை பற்றி யோசிக்க நேரமில்லை. அங்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்ட் வருவேன். விளையாட்டு வீராங்கனையாக, பயிற்சியாளர் கேரக்டர்களில் நடிக்க ஆசை.
நாம் என்ன ஆக வேண்டும் என்பதற்காக எடுத்து கொண்ட காரியங்களில் எந்த சவால் வந்தாலும் மனம் சோர்ந்து விடக்கூடாது. விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்தால் யாரும் சாதிக்கலாம். இதை இன்றைய இளையதலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றவாறு நம்மிடமிருந்து விடைபெற்றார்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.