படம் முழுக்க ரஜினியுடன் நடிக்கணும்: திரிஷா ஆசை
"ராங்கி" படம், வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி
இயக்குனர் முருகதாஸ் கதை எழுத, "எங்கேயும் எப்போதும்" பட இயக்குனர் சரவணன் இயக்கிய படம் தான் "ராங்கி". இதில் நிருபராக நடித்துள்ளேன். ஹீரோயின் படம் என பார்க்காமல் லிபியா, உஸ்பெக்கிஸ்தான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடந்தது.
பொன்னியின் செல்வன் "குந்தவை" டூ ராங்கி
"ராங்கி" படத்தில் குந்தவைக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் தான். நிருபர்கள் எப்பவும் மேக்கபின்றி எளிமையாக இருப்பாங்க. முடிந்த வரை அந்த கேரக்டரை வெளிப்படுத்தி இருக்கேன். ஒரு பேஸ்புக் கதையில் துவங்கி ஒரு பொண்ணு பெரிய விஷயத்தில் சிக்கும் கதை. டூப் இல்லாமல் ஆக் ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறேன்.
ஹீரோ பார்க்க புதுமுகமாக இருக்கிறாரே
இயக்குனர் சரவணன் உஸ்பெகிஸ்தானில் ஒரு பையனை தேடி பிடித்து அறிமுகப்படுத்தினார். அவர் பேர் ஆலிவ். அவ்வளவு உணர்ச்சிகளுடன் அந்த பையன் நடிச்சிருக்கான். படம் முழுக்க துறு, துறுன்னு இருப்பார். அனைவருக்கும் அவர் நடிப்பு பிடிக்கும்.
படம் வெளியானதும் உங்கள் மனநிலை
மக்கள் என்ன சொல்லுவாங்க அப்படிங்கிற எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு ஹீரோயின் மையப்படுத்தி எடுத்த படம் என்பதால் எது நடந்தாலும் நம்ம தான் பொறுப்பு. ஒவ்வொரு படம் ரிலீஸ் வெளிவரும் போதும் எனக்கு ஒரு பதட்டம் இருக்கும்.
எப்படி எப்பவுமோ சிலிம்மா இருக்கீங்க
இந்த கேள்விக்கு என்கிட்ட சரியான பதில் இல்லை. குடும்ப ஜீன் என சொல்லலாம். வேற என்ன சொல்றது காரணம் தெரியல. எப்போதும் என்னை மகிழ்ச்சியா வச்சிருக்கேன்..
உங்களை இயக்கிய இயக்குனர்கள் குறித்து
தொடர்ந்து என்னை நல்ல கதைகளில், நல்ல கேரக்டர்களில் நடிக்க வைத்த மணிரத்தினம், கவுதம் மேனன், பிரேம், சரவணன் அனைவருக்கும் நன்றி. புது இயக்குனர்கள் நல்லா கதை பண்றாங்க. அவர்கள் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன். படம் முழுக்க ரஜினியுடன் நடிப்பது என் ஆசை.
எங்க சென்றாலும் "குந்தவை"யாக பார்ப்பது
இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி... கல்கி நாவல் படித்தவர்களுக்கு குந்தவை மீது பெரிய இமேஜ் இருக்கு. அதில் நான் சரியாக இருப்பேனா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால் இன்று குந்தவை என்றால் நான் தான் என மக்கள் கூறுவதில் மகிழ்ச்சி.
திரிஷாவுக்கு 2022 எப்படி இருந்தது
ரொம்ப நல்லா இருந்தது... பான் இந்தியா படமாக "பொன்னியின் செல்வன்" வெளியானது பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. "ராங்கி"லயும் என் நடிப்பு மக்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.