டி.எஸ்.கே., சிக்ஸர் அடித்த லப்பர் பந்து
தொலைக்காட்சியில் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட், சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து "லப்பர் பந்து" கொடுத்த வெற்றியால் மலையாள சினிமாவில் நுழைந்ததை நம்முடன் பகிர்கிறார் டி.எஸ்.கே.,
""இயற்பெயர் சரவணக்குமார், பிறந்து வளர்ந்தது திருச்சி. முன்பு எனது தந்தை காமெடி நிகழ்ச்சி சி.டி.,க்களை வாங்கி வருவார். அதில் முழுவதும் மிமிக்கரி மட்டுமே இருக்கும். அதை தினமும் கேட்டு மனதில் பதிந்து அதன் மூலம் நானும், எனது சகோதரரும் மிமிக்கிரி செய்தோம்.
பள்ளியில் சக மாணவர்களுடன் மிமிக்கிரி செய்து காண்பித்த போது கைதட்டல் கிடைத்தது. எனக்குள் இருந்த மிமிக்கிரி திறமையை எனக்கே தெரியப்படுத்தி ஊக்கப்படுத்தி, போட்டிகளில் வெற்றி பெற உதவியாக இருந்தவர்கள் எனது ஆசிரியர்கள். பள்ளிப்படிப்பை முடித்து கல்லுாரியில் சேர்ந்தேன். கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகளில் மிமிக்கிரி செய்து வெற்றி பெற்றேன்.
2007ல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான போட்டியில் முன்னணி நடிகர், நடிகைகளின் குரல்களை மிமிக்கிரி செய்ததால் வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் தங்களின் சொந்த ஊரின் பெயரை அடைமொழியாக வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்தது.
அதே போன்று "திருச்சி சரவணக்குமார்" என வைத்துக்கொண்டேன். இந்த பெயரை முழுவதுமாக யாரும் கூப்பிடாததால் அதை சுருக்கி "டி.எஸ்.கே.," என மாற்றினேன். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்தேன்.
வாழ்க்கையில் அடுத்த கட்டம் செல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியதால் நடிக்க துவங்கினேன்.
மகான் கணக்கு, வாராயோ வெண்ணிலாவே, காவல், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, அடங்காதே, சிக்சர், பெட்ரோமாக்ஸ், தனுசு ராசி நேயர்களே, வரலாறு முக்கியம், கருங்காப்பியம், வல்லான் உள்பட 18 படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். தற்போது நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் "பாம்" திரைப்படத்தில் நடித்து உள்ளேன்.
சமீபத்தில் வெளியான "லப்பர் பந்து" படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திறமையை வெளிப்படுத்தினேன். இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. பல ஆண்டுகளாக கிடைக்காத வெற்றி "லப்பர் பந்து" மூலமாக கிடைத்தது.
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் உடன் "விலாயத் புத்தா" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும், பல வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறேன்.
மிமிக்கிரி கலைஞராக இருந்ததால் மற்ற நடிகர்களின் பாவனைகள் உடலில் அதிகமாக வெளிப்படும். நடிகராக விருப்பம் இருந்ததால் மிமிக்கிரியை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஓர் அடையாளம் மட்டுமே; சினிமாவில் ஜெயிக்க அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். எல்லாரையும் வாழ வைத்த சென்னை தற்போது என்னையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி
வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட
சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!
கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்
மாடர்ன் வில்லி மகாலட்சுமி
மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்
எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்
ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்
சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.