நாகார்ஜுனா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடித்த சோக்காடே சின்னி நாயனா படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ள படம் பங்காராஜு. இந்த படத்தில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் உப்பென்னா புகழ் கிரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். கல்யாண் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை நாகார்ஜூனாவே தயாரித்துள்ளார் என்பதால் வரும் சங்கராந்தி பண்டிகை அன்று இந்த படத்தை வெளியிட விரும்புகிறார். ஆனால் அந்த சமயத்தில் ஆர்ஆர்ஆர் மற்றும் ராதே ஷ்யாம் என இரண்டு பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல பவன்கல்யாண், ராணா இணைந்து நடித்துள்ள பீம்லா நாயக் படமும் இப்போது வரை சங்கராந்தி பண்டிகை ரேஸில் கலந்து கொள்வதற்கு தயாராக இருக்கிறது.
ஆனால் பீம்லா நாயக் படம் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.. நாகார்ஜுனாவும் அதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். அப்படி ஒருவேளை இந்தப் படம் தனது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டால் அதற்கு பதிலாக அதே சங்கராந்தி பண்டிகையில் தனது பங்காராஜு படத்தை திரையிடுவதில் உறுதியாக இருக்கிறாராம் நாகார்ஜுனா. அதனால் தனது படமும் ஜன-15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவலை கசிய விட்டுள்ளார் நாகார்ஜுனா.
மாற்றம் வரும் : நாகார்ஜூனா நம்பிக்கை
எழுத்து அளவு
அ-
அ+
Advertisement
பிறமொழி செய்திகள்
காணாமல் போன மோகன்லால் பட இயக்குனர் ; புதிய இயக்குனர் படத்தை இயக்குகிறார்
மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 230 கோடி வரை வசூலித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் தருண்மூர்த்தி
பாடகர் வேடனின் செயினில் இருப்பது புலிப்பல் தான் ; ஆய்வறிக்கை வெளியானதால் சிக்கல்
சமீப வருடங்களாக மலையாளத்தில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி வருபவர் ராப் பாடகர் வேடன். கடந்த வருடம் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல்
இத்தனை நாளாக செய்யாத ஒரு விஷயத்தை ஐம் நோபடி படப்பிடிப்பில் செய்த பார்வதி
நடிகை பார்வதி நடிப்பில் கடந்த வருடம் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது மலையாளத்தில் பிரதம திருஷ்த்யகார் மற்றும் ஐம் நோபடி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.