பிளாஷ்பேக் : எங்கே மோகனா?
சில நடிகைகள் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே திடீரென்று நடிப்பை விட்டு விலகி விடுவார்கள், அதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிப்பதில்லை. சிலர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள். புகுந்த இடத்தில் நடிக்க கூடாது என்று தடை போடுவதோடு நீ சினிமா நடிகை என்பது கூட தெரியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளையும் அந்த காலத்தில் விதித்து விடுவார்கள். இதன் காரணமாக பல நடிகைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்க பெறுவதில்லை. அப்படியானவர்களில் ஒருவர் மோகனா.
1957ம் ஆண்டு வெளிவந்த “ஆரவல்லி” என்ற படத்தில் ஆரவல்லியாக நடித்தவர் ஜி.வரலட்சுமி. சூரவல்லியாக நடித்தவர் மோகனா. ஜி.வரலட்சுமி பிற்காலத்தில் பெரிய நடிகையானார். ஆனால் மோகனா சில ஆண்டுகள் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார். 1957ம் ஆண்டு வெளிவந்த “புதுமைப்பித்தன்”, “மாயா பஜார்” மற்றும் நாடோடி மன்னன் படத்திலும் நடித்துள்ளார் மோகனா. ‛ஷியாமளா, மாயா பஜார், காத்தவராயன், குமுதம் ஆயிரம் ரூபாய், மாடி வீட்டு மாப்பிள்ள, சுமங்கலி, ஹரிச்சந்திரா, சாரங்கதரா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கற்புக்கரசி, மாங்கல்யம், எங்கள் செல்வி" போன்றவை இவர் நடித்த மிக முக்கிய படங்கள்.
பெரும்பாலான படங்களில் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். 20 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சில படங்களில் நாயகியாக நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.
ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு
புதுமுகங்கள் நடிப்பில், தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் யாத்திசை. இவர் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில்
பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?
அருண்விஜய் நடித்த வணங்கான் படத்துக்கு அடுத்த படத்தை இயக்காமல் அமைதியாக இருக்கிறார் பாலா. ஒரு தொழிலதிபர் மகனை கொண்டு படம் இயக்குகிறார் என கூறப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது
மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்
மலையாளத்தில் உன்னிமுகுந்தன் நடிப்பில், விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில் சபரிமலை ஐயப்பன் மகிமை சொல்லும் படமாக வந்து வெற்றி பெற்றது மாளிகைப்புரம். இப்போது அதே இயக்குனர்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்
2025ல் வெளிவந்த துல்கர் சல்மான் நடித்த காந்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தாய் கிழவி இயக்குனர் சிவக்குமார் முருகேசன்
எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவிஸ்ரீபிரசாத். தெலுங்கில் பணியாற்றி வந்தாலும் அவர் சிறு வயது முதலே சென்னையில்தான் வசித்து வருகிறார். அவரது தெலுங்குப்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.