தமிழகத்தில் கடந்த 1952ல் நடந்த முதல் சட்டசபை தேர்தலில், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாஜி முதல்வரானார். 1954ல் காமராஜர் முதல்வரான போது, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார். அடுத்து, 1967ல் இருந்து தி.மு.க அரசில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.