சென்னை கோயம்பேட்டில் பாரில் வெடித்த தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் இப்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் யான்சி வயது 18. தனது இன்ஸ்டா நண்பர்களை பார்க்க சென்னை வந்தார். 17 வயதான தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கினார்.