சென்னையில் பயங்கர தீ 80 கடை சாம்பல் அரசு எங்கே? திடீர் போராட்டம் சென்னை மவுண்ட் ரோடு ஜிபி ரோடு அருகே பார்டர் தோட்டம் பகுதியில் வரிசையாக பழைய இரும்பு மற்றும் வாகன டயர் கடைகள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. திங்கட்கிழமை நள்ளிரவில் எதிர்பாராத விதமாக இந்த கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் இருந்து அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவியது.