கோவை சாய்பாபா காலனி அனன்யா நெஸ்ட் வளாகத்தில், உமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கர்ப்பிணிகள், தங்கள் கணவர், பெற்றோர், உறவினர்களுடன் பங்கேற்றனர். கர்ப்பிணிகளுக்கு மருத்துவமனையுடன் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவமனை சார்பில் இது போல 30 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.