ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை வடபழனி மாலில் வேலை செய்து வந்தார். அதே மாலில் வேலை பார்த்த சென்னை சூளைமேட்டை சேர்ந்த சையது இப்ராஹிமுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில், இந்து மதத்தை சேர்ந்த காதலியை முஸ்லிமாக மாறும்படி காதலன் வற்புறுத்தினார். முஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி இருக்கிறார்.