உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும் என்கிற கூற்று நீண்ட காலமாக உள்ளது. அந்த அளவுக்கு உலகம் இயங்க மிக முக்கியமானது தேனீக்கள். இதனை உணர்ந்த பிரதமர் மோடி இது சார்ந்த புரட்சிகர திட்டம் ஒன்றை அறிவித்தார். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும்; அதுசார்ந்து தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் மிதி கிராந்தி எனப்படும் இனிப்பு புரட்சியை அறிமுகப்படுத்தினார்.