மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பாஜ அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியை சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வரானார். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய ஆட்சியில், அரசு நலத்திட்டங்களில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். மம்தா ஆட்சியில் பொதுப் பிரிவு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாயும், பழங்குடியினர் மற்றும் பட்டியலின பெண்களுக்கு 1700 ரூபாயும் உதவித் தொகை வழங்கப்பட்டது.