ரஞ்சித்திடம் மன்னிப்பு கேட்ட துஷாரா விஜயன்

ரஞ்சித்திடம் மன்னிப்பு கேட்ட துஷாரா விஜயன்
Advertisement
எழுத்து அளவு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை ஓடிடியில வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் நடித்துள்ள பல கேரக்டர்கள் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு 1970களில் வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை கதையை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ரஞ்சித்.

இந்நிலையில் இப்படத்தில் மாரியம்மாள் என்ற நாயகி வேடத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து கூறுகையில், ரஞ்சித் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து விட்டேன். ஆனால் தொடர்ந்து17முறை அழைப்பு வந்தபோதுதான் அது உண்மையான போன்கால் தான் என்று தெரிந்தது. பின்னர் பா.ரஞ்சித்தின் அலுவலகத்திற்கு சென்று அவரிடத்தில் மன்னிப்பு கேட்டேன்.

அதையடுத்து என்னிடத்தில் மாரியம்மாள் கேரக்டர் பற்றி சொன்ன டைரக்டர், ஒரு காட்சியில் நடித்துக்காட்டுமாறும் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு போட்டோ சூட்டில் என்னை மாரியம்மாளாகவே மாற்றிய இயக்குனர், படத்திலும்அந்த கதாபாத்திரமாகவே வாழ வைத்து விடடார். அதற்காக பா.ரஞ்சித்துக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சார்பட்டா பரம்பரை படத்திற்கும், எனது கேரக்டருக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியொரு கேரக்டரில் நடிக்கத்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். எனது கனவை டைரக்டர் ரஞ்சித் நனவாக்கி விட்டார். இப்போது கிடைத்துள்ள பாராட்டு இனிமேல் படத்திற்கும் படம் இன்னும் சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும் என்கிற உற்சாகத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் துஷாரா விஜயன்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛ஜனநாயகன் ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்

‛ஜனநாயகன் ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்

முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால்


மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர

மே 28ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் கர

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் கர. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் கடந்த


ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு

ஏஐ மூலம் ஆபாசப் படங்கள் : ருக்மிணி வசந்த் கண்டிப்பு

தமிழில் ஏஸ், மதராஸி படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ருக்மிணி வசந்த். கன்னடத்தில் டாக்சிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது பிரசாந்த் நீல் இயக்க, ஜுனியர் என்டிஆர்


சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

இயக்குனர் சுந்தர்.சி சினிமாவில் 31 ஆண்டுகளாக இருக்கிறார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய குஷ்பு, பின்னர் ஹீரோயின் ஆகி தென்னிந்திய மொழிகளில் கலக்கினார். இப்போதும் சில


திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா

திரையுலகில் 40 வருடங்களை நிறைவு செய்த நாகார்ஜுனா

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவர் திரையுலகிற்கு வந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1986ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான விக்ரம் படத்தின்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map