பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு
1950ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய "பொன்னியின் செல்வன்" கதை, வார இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், 5 பாகங்கள் கொண்ட புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தின் வியாபாரமும் விண்ணைத் தொட்டது. சோழ தேசத்தில் நடக்கும்படியாக எழுதப்பட்ட இந்தக் கதைக்குள் இருந்த சுவாரஸ்யத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர், 1958ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து "பொன்னியின் செல்வன்" கதையின் உரிமையைப் பெற்றார்.
அதன் பிறகு இயக்குனர் மகேந்திரனை அழைத்து அதற்கு திரைக்கதை எழுதச் சொன்னார்; அவரும் எழுதிக் கொடுத்தார். சில இயக்குநர்களை அணுகியபோது இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படத்தை இயக்க தயங்கினர். இறுதியில் தானே தயாரித்து இயக்குவதாக முடிவெடுத்தார். அதோடு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தானே நடிக்கவும் முடிவு செய்தார்.
ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, நம்பியார், எம்.என்.ராஜம், டி.எஸ். பாலையா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைப்பது என்றும், ஜி.கே. சாமு ஒளிப்பதிவு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. "எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்" அளிக்கும் "பொன்னியின் செல்வன்" போஸ்டர்கூட வெளியிடப்பட்டது.
ஒருநாள், காரில் சென்றபோது, எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய 6 மாதங்கள் ஆனது. குணமடைந்ததும் தனது படத்தில் நடிப்பதை விட பாதியில் நிற்கும் மற்றவர்களின் படத்தை நடித்து முடித்துக் கொடுக்க விரும்பினார். "மலைநாட்டு இளவரசன்", "சிரிக்கும் சிலை", "சிலம்புக் குகை", "தூங்காதே தம்பி தூங்காதே" ஆகிய 4 படங்களை நடித்துக் கொடுத்தார். இந்தப் படங்களை நடித்து முடிப்பதற்கு உள்ளாகவே மேலும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் அவரால் பொன்னியின் செல்வன் கதை பக்கம் செல்ல முடியவில்லை.
மீண்டும் நான்கு வருடங்களுக்குப் பிறகு மேலும் பணம் கொடுத்து கதை உரிமையை புதுப்பித்துக் கொண்டார். ஆனாலும் அவரால் பொன்னியின் செல்வன் படத்தை கடைசி வரை இயக்க முடியவில்லை. அவர் ஆசைப்பட்ட வந்திய தேவன் கேரக்டரிலும் நடிக்க முடியவில்லை.
கருப்பு வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர்
சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடித்து வெளிவந்த கருப்பு திரைப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள்
தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள படம் பெத்தி. ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் நான்காம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள்
மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ்
தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்!
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில், புதிதாக திருமணமான பெண்ணாக அவர் நடித்திருந்தார்.
விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன்
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் எச்.வினோத் உதவியாளர் ஹர்ஷா இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகும் பட அறிவிப்பை ,சென்னையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.