பெண் உட்பட 2 பேர் கைது, ஒருவர் எஸ்கேப் | Thoothukudi | Two Killed in Explosion at Illegal Firecracker Manufacturing Unit தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காட்டுக் கோவிலில், அதே ஊரைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து உள்ளனர். நேற்றிரவு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது வெடி விபத்து ஏற்பட்டது. அதில் ஊரைச் சேர்ந்த ஐயப்பன் வயது 30, புல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த மாலதி வயது 25 ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.