திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, சமீபத்தில் விசிக குறித்து காட்டமாக விமர்சித்து இருந்தார். இந்த விமர்சனம் விசிக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் பதிவை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் விசிக சார்பில் கண்டன இன்று ஆர்ப்பாட்டம் போலீசாரிடம் அனுமதி கோரினர். அதே நேரம் விசிக மாவட்ட செயலாளர் அன்பானந்தம் ஆ.ராசாவை தரக்குறைவாக பேசியதாக ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தரப்பிலும் அனுமதி கேட்கப்பட்டது. ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் இரு கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த கேட்டதால் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். போலீசாரின் தடையை மீறி, இன்று குன்னம் பஸ் ஸ்டாண்டு அருகே விசிக மற்றும் திமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். ஆரம்பத்தில் இரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பி கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு உருவாகியதால் போலீசார் இருவரையும் விளக்க முயற்சி செய்தனர். கைகலப்பாக மாறி இருதரப்பினரும் கல் மற்றும் குச்சிகளை வீசி எறிந்தனர்,