சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இபிஎஸ் தரப்பினர் ஒரு பிரிவாகவும், வேலுமணி, சிவி சண்முகம் தரப்பில் ஒரு பிரிவாகவும் எம்எல்ஏக்கள் பிரிந்தனர். சட்டசபையில் இது அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. தவெக அரசின் நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில் வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவாக ஓட்டு போட்டனர். இதன் பலனாக, வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் உண்டு என பேசப்பட்டது.