மேற்காசிய போரால் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள, பிரதமர் மோடி சுயசார்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பின், இந்திய வாகன சந்தையிலும், நுகர்வோர் மத்தியிலும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழல் மற்றும் சவால்கள் குறித்து SSEM எனப்படும் ஸ்மார்ட் இ-மொபிலிட்டி சங்கத்தின் பொருளாளர் பரதன், தினமலருக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.