தென் மாவட்டங்களில் மழை, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும், சென்னையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 80 டு 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை கட்டுக்குள் வந்தது. கோயம்பேட்டில் காய்கறிகள் வங்க வந்த இல்லத்தரசிகள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மழைக்காலம் என்பதால் காய்கறிகள் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாகவே வியாபாரிகள் கூறினார்.