தமிழக முதல்வர் விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கான துறைகள் நேற்று ஒதுக்கப்பட்டன. கடந்த ஆட்சியின்போது, பிப்ரவரி 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து, துறைகளுக்கான நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால், வனம், சுற்றுச்சூழல், விவசாயம், வருவாய், வீட்டு வசதி, கூட்டுறவு, சமூக நலம், மீன்வளம், பால்வளம், சுற்றுலா, இந்துசமய அறநிலையத்துறை, ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட 22 துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பட்ஜெட் தயாரிப்பு பணிகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.