பாலிவுட் நடிகையிடம் நூதன மோசடி

பாலிவுட் நடிகையிடம் நூதன மோசடி
Advertisement
எழுத்து அளவு

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை அஞ்சலி பாட்டீல். தமிழில் காலா, குதிரைவால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் வசித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு அஞ்சலிக்கு கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் போன் செய்தார். அவர் உங்களது பெயரில் வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலில் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார்.

இதைத் தொடர்ந்து மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு பானர்ஜி என்பவர் அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். இதனை சரிசெய்ய 96 ஆயிரத்து 525 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் பயந்துவிட்ட அஞ்சலி அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பினார். பின்னர் அவர் மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291 செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த பணத்தையும் நடிகை அஞ்சலி அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிறகுதான் அஞ்சலி பாட்டீல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் நூதன முறையில் 5 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதால் குற்றவாளி எளிதில் பிடிபட்டு விடுவார். அஞ்சலி பக்கம் எந்த தவறும் இல்லை என்றால் அவர் ஏன் பணம் அனுப்ப வேண்டும். இந்த இரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

பாலிவுட் செய்திகள்

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர்

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானவர். தற்போது இந்திய சினிமாவில் அதிக


உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளதா ? மருத்துவமனையில் டென்ஷனான சல்மான் கான்

சினிமா பிரபலங்கள் ஜிம், ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும்போதும், விமான நிலையங்களுக்கு செல்லும்போதும் அங்கிருக்கும் பப்பராசிகள் (புகைப்படக் கலைஞர்கள்) சம்பந்தப்பட்டவர்களின்


ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

ராஜ்குமார் ஹிரானியின் வெப் தொடர் : ஜூலை 3ல் வெளியாகிறது

முன்னணி பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, டங்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது அவர் கதை எழுதி தயாரித்துள்ள வெப் தொடர்


‛துரந்தர் 2 வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

‛துரந்தர் 2 வழக்கு தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் வெளியான ‛துரந்தர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‛துரந்தர் 2 தி ரிவெஞ்ச் திரைப்படம் கடந்த மார்ச் இறுதியில் வெளியாகி


புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான்

புதைத்த நாயை தோண்டி எடுத்த ஷாருக்கான்

பொதுவாக பாலிவுட் நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களையும், கை கடிகாரங்களையும் வைத்திருப்பதை ஒரு அந்தஸ்தாக கருதுகிறவர்கள். அதேபோன்று விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பதிலும் ஆர்வம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map