செவி திறனை இழந்த பாடகி

செவி திறனை இழந்த பாடகி
Advertisement
எழுத்து அளவு

பிரபல பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக். 25 மொழிகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் சில பாடல்களை பாடி உள்ளார். ஏக் தோ தீன்", "சோலி கே பீச்சே கியாஹே" பாடல்கள் மூலம் உலக புகழ் பெற்றார். இந்த நிலையில் 58 வயதான அல்கா தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தியதால் தனது செவித்திறன் திடீரென பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கும்போது, எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த மருத்துவர், வைரஸ் தாக்குதலால் உணர்திறன் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் செவித்திறன் இழப்புஏற்பட்டதாகத் தெரிவித்தார். சிகிச்சை எடுத்து வருகிறேன். என் ரசிகர்கள் மற்றும் இளம் பாடகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஹெட்போன்களில் பாடல்களை அதிக சத்தமாக வைத்து கேட்பதை தவிர்த்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map