
உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம்
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த நடிகை பாதிக்கப்பட்ட அந்த சமயத்தில் வில்லன் நடிகர் லாலின் வீட்டில் தான் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு காவல் நிலையம் வரை சென்று இந்த வழக்கு குறித்து பதிவு செய்ய உதவி செய்தார்.
இந்த வழக்கில் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு குறித்து அவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகை அந்த சமயத்தில் என்னை தேடி வந்தபோது, அவர் பாதிக்கப்பட்டதை அறிந்து அதற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என நினைத்தேன். அதன்பிறகு வந்த நாட்களில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் மிக உயரிய தண்டனை கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தேன். இப்போது மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த வழக்கு உயர்நீதிமன்றம் அப்பீலுக்கு போனாலும் உண்மையில் நடந்தது என்ன என்பதை அங்கேயும் சொல்வதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.