ஓ.டி.டி., - தியேட்டர்கள் சண்டை: மூடுவோம் என எச்சரிக்கை

ஓ.டி.டி., - தியேட்டர்கள் சண்டை: மூடுவோம் என எச்சரிக்கை
Advertisement
எழுத்து அளவு

சென்னை: ஓ.டி.டி.யில் படம் வெளியிடுவதை கண்டித்து மீண்டும் தியேட்டர்களை மூடுவோம் என உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனாவால் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது 100 சதவீத அனுமதியுடன் இயங்க தயாராகி வருகின்றன. பெரிய நடிகர்களின் புதுப்படங்கள் தியேட்டரில் வெளியாக காத்திருக்கின்றன.இந்நிலையில்மூன்று வாரங்கள் மட்டுமே தியேட்டரில் படம் திரையிடப்படுகிறது. அதற்கடுத்து ஆன்லைனில் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் விரும்பத் துவங்கியுள்ளனர். மாஸ்டர் படம் வெளியாகிய 15 நாட்களுக்குள் ஆன்லைனில் வெளியிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே தெலுங்கானாவில் தியேட்டர் அதிபர்கள் புது கோரிக்கை வைத்துள்ளனர். பெரிய பட்ஜெட் படம் என்றால் தியேட்டரில் வெளியாகி ஆறு வாரத்திற்கு பின்னரே ஆன்லைனில் வெளியிட வேண்டும். குறைந்த செலவில் எடுத்த படம் என்றால் நான்கு வாரத்திற்கு பின் தான் ஆன்லைனில் வெளியிட வேண்டும். இல்லையென்றால் மார்ச் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என எச்சரித்துள்ளனர்.

அதே போன்ற எதிர்ப்பு தமிழகத்திலும் எழ தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் கர்ணன் மற்றும் விஷாலின் சக்ரா உள்ளிட்ட பல படங்கள் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது: சில தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி குறைந்த நாட்களிலேயே ஆன்லைனிலும் வெளியிட முயற்சிக்கின்றனர். வெளிநாட்டு உரிமையையும் இங்கு படங்கள் வெளியாகும் போதே தருகின்றனர். இதனால் அடுத்த நாளே இணையதளத்தில் படம் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தியேட்டர் தொழில் தான் பாதிக்கும். இதை தடுக்க தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் இணைந்து நடவடிக்கை எடுப்பதே நல்லது. இல்லையென்றால் தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வரலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

‛என் இனிய பொன் நிலாவே பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி

‛என் இனிய பொன் நிலாவே பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி

புதுடில்லி : காப்பிரைட் சட்டப்படி ‛‛ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது எனக் கூறி இளையராஜாவின் மனுவை டில்லி ஐகோர்ட்


அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய ஆர்ஆர்ஆர் ஹீரோக்கள்

அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய ஆர்ஆர்ஆர் ஹீரோக்கள்

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா மற்றும் பலர் நடிப்பில் 2022ல் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அது மட்டுமல்லாது, என்டிஆர், ராம் சரண்


விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள்

விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தான் ஆட்சியைப் பிடித்தார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் விஜய் முதல்வரான பின் தமிழக


தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி

தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவியின் 158வது படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. வால்டர் வீரய்யா படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி, இயக்குனர் பாபி கொல்லி


சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர்

சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர்

தமிழ் சினிமாவிலிருந்து மூன்று பேர் முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதாக காலையில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த எண்ணிக்கை தற்போது நான்கு ஆக அதிகரித்துள்ளது.இன்று

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map