ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்

ஆமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்
Advertisement
எழுத்து அளவு


தமிழ் சினிமாவில் நடிகராக அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடித்த "கோமாளி" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து "லவ் டுடே" படத்தை இயக்கியதோடு அதில் கதாநாயகனாகவும் நடித்தார். அந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது. அடுத்து அவர் கதாநாயகனாக நடித்த "டிராகன்" படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

"லவ் டுடே" படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து "லல்யபா" என்ற பெயரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள். ஆனால், அந்தப் படத்திற்கு ஹிந்தி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அப்படத்தில் ஹிந்தி நடிகர் ஆமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

"லவ் டுடே" படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், நடிகர் ஆமீர்கானை சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்து, “நான் எப்போதும் சொல்வதைப் போல வாழ்க்கை எதிர்பாராதது…உங்கள் அருமையான வார்த்தைகளுக்கு நன்றி ஆமீர்கான் சார். வாழ்நாள் முழுவதும் இதைப் போற்றுவேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map