நடிக்க வந்தது ஏன்? - பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

நடிக்க வந்தது ஏன்? - பிரதீப் ரங்கநாதன் விளக்கம்
Advertisement
எழுத்து அளவு

ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே. இதனை கோமாளி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டாவது படத்திலேயே நடிக்க வந்தது ஏன்? என்பது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:

நான் நடிப்பது ஒன்றும் புதியதல்ல. நான் இயக்கிய குறும்படங்களை நானே இயக்கி நடித்திருக்கிறேன். அப்படி 6 வருடங்களுக்கு முன்பு நான் இயக்கிய குறும்படம் தான் லவ் டுடே. அதில் நான் நடித்திருந்தேன். அந்த குறும்படத்தை தற்போது பெரிய படமாக உருவாக்கி இருக்கிறேன். லவ்டுடே கதையின் நான் நடிக்க வேண்டும் என்று எனக்காக எழுதிய கதை. அதனால் நான் நடிக்கிறேன்.

கோமாளி படத்திற்கு முன்பே முதல் படமாக இந்த படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் புதுமுகம் என்பதால் எல்லோரும் தயங்கினார்கள். அதனால் பெரிய ஹீரோவை வைத்து ஒரு படம் பண்ணி அதை வெற்றிப் படமாக்கி காட்டிவிட்டு இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன். தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமும் கதையை கேட்டுவிட்டு நாங்களே தயாரிக்கிறோம் என்று முன்வந்தார்கள். இப்படித்தான் நடிக்க வந்தேன். இனி வரும் காலங்களில் நடிப்பு, இயக்கம் இரண்டையும் செய்வேன். மற்ற இயக்குனர்கள் படத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்

திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்

தமிழக முதல்வர் விஜயின் நண்பரும் ‛மெட்டிஒலி, திருமதி செல்வம் போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவருமான நடிகர் சஞ்சீவ் சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛எனக்கும் முதல்வர்


திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி

திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி

ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம் 3 படம் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இந்தபடம் இல்லை என்ற விமர்சனம் பொதுவாக எழுந்துள்ளது. அதேசமயம் படத்திற்கு வரவேற்பும்


‛கேஜிஎப்-3, சலார்-2 எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்

‛கேஜிஎப்-3, சலார்-2 எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் ‛சலார் என்ற படத்தை இயக்கியவர், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‛டிராகன் படத்தை


தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!

தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!

‛பரியேறும் பெருமாள் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதன்பிறகு ‛கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். இந்நிலையில் கர்ணன் படத்தை


ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!

ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கருப்பு. அடுத்தடுத்து சூர்யா நடித்த படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map