சென்னை தந்த தனிமை… மாளவிகா மோகனன் வருத்தமும், மகிழ்வும்…

சென்னை தந்த தனிமை… மாளவிகா மோகனன் வருத்தமும், மகிழ்வும்…
Advertisement
எழுத்து அளவு


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த "பேட்ட" படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின் விஜய் ஜோடியாக "மாஸ்டர்", தனுஷ் ஜோடியாக "மாறன்", படங்களிலும் "தங்கலான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். கார்த்தி நடித்துள்ள "சர்தார் 2" படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் "பாக்கெட் நாவல்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்ட ஒரு அரங்கில் நடந்து வந்தது.

மார்ச் மாதத்தில் சென்னையில் தனிமையில் இருந்தது குறித்து ஒரு நீண்ட பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன். அதில்,

“மார்ச் மாதம் எனக்கு ஒரு கலவையான மாதமாக இருந்தது.

அந்த மாதத்தின் பெரிய ஹைலைட் ? "பாக்கெட் நாவல்" படத்தின் ஷூட்டிங் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்தது.

நமது தலைமுறையின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று சொல்லலாம். அவரது வேலை முறையைப் பார்த்து, அவரால் வழிநடத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்டு இருப்பது என் கேரியரில் இதுவரை நான் பெற்ற மிகச் சிறப்பான கிரியேட்டிவ் அனுபவங்களில் ஒன்று. (இதைப் பற்றி பின்னாடி விரிவாக எழுதுகிறேன், அது நீண்ட கதை).

மாதத்தின் பெரும்பகுதியை சென்னையில் ஷூட்டிங்குக்காக செலவிட்டேன். வேலை அற்புதமாக இருந்தாலும், வீட்டை விட்டு இவ்வளவு நாள் தள்ளி இருந்தது என்னை எதிர்பார்த்ததை விட அதிகமாக பாதித்தது. நீண்ட நாள் வேலை முடிந்து காலியான அறைக்கு திரும்புவது எளிதாகவே இல்லை — எவ்வளவு தடவை செய்தாலும் அது பழகாது போல. இந்த முறை தனிமை என்னை ரொம்பவே உலுக்கியது.

குடும்பம் இரண்டு நாள் வருகை தந்தபோது என் ஆன்மாவுக்கு ஒரு பெரிய இடைவெளி கிடைத்தது. சென்னை மற்றும் மகாபலிபுரத்தின் அழகான கோவில்களைச் சுற்றினோம், உள்ளூர் உணவு வகைகளை எல்லாம் சாப்பிட்டோம், அவர்களுடன் இருந்ததே ரொம்ப நல்லா இருந்தது. குறிப்பாக என் பாட்டி வந்தது, அவர் அரிதாகத்தான் வருவார்.

மாதத்தின் பெரும்பகுதியை வெளியில் செலவழித்துவிட்டு, சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு திரும்பினேன். இரண்டு நாள் முன்பு ஒரு அழகான சூரிய அஸ்தமன படகு சவாரி போனேன். வானம் அற்புதமாக இருந்தது, கடல் காற்று குணப்படுத்துவதாக இருந்தது, அலைகள் மிகவும் இதமாக இருந்தன. அந்த மாலை, வீட்டை ரொம்பவே மிஸ் செய்த நிலையில், மும்பையின் மீது இன்னும் கொஞ்சம் காதல் விழுந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு

பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்?

மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மாளிகைப்புரம் இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ்

எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

எல்லம்மா தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map