பிக்பாஸை விமர்சித்த வனிதா
எழுத்து
அளவு
பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியில் போட்டியாளராக நுழைந்த வனிதா அதன்பின் பிக்பாஸ் வீட்டிலிருந்து தாமாகவே வெளியேறினார். அதுமுதலே பிக்பாஸ் முன்போல் இல்லை. எல்லாமே தவறாக நடக்கிறது என விமர்சித்திருந்தார். அதனால் தான் கமல் கூட வெளியேறிவிட்டார் எனவும் குண்டைத் தூக்கி போட்டார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை குறித்து சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்த அவர், இப்போதும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தனது பொழுதுபோக்கு தன்மையை இழந்துவிட்டது. வன்முறை, சண்டைகள், தவறான வார்த்தைகள் என மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. இது உங்களை கொல்லக்கூடும்." என கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகச்சியின் மூலம் பிரபலமான வனிதா, தற்போது அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியையே விமர்சித்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.