தண்ணீர் பிரச்னையால் வாரணாசி படப்பிடிப்பை தொடர்வதில் திடீர் சிக்கல்

தண்ணீர் பிரச்னையால் வாரணாசி படப்பிடிப்பை தொடர்வதில் திடீர் சிக்கல்
Advertisement
எழுத்து அளவு

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் "வாரணாசி". இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் மாறிமாறி நடைபெற்று வருகிறது. தற்போது ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது. இங்கே தண்ணீருக்கு அடியில் இடம்பெறுகின்ற ஒரு ஆக்ஷன் காட்சியை எடுப்பதற்கு ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். இந்த காட்சியில் மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் நடிக்கின்றனர்.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நீச்சல் குளம் செட் அமைக்கப்பட்டு, ஒரு லாரிக்கு பத்தாயிரம் லிட்டர் என கிட்டத்தட்ட 150 லாரி தண்ணீர் தேவை என நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது ஐதராபாத்தில் கோடைக்காலம் உச்சத்தில் இருப்பதால், பொதுமக்களின் குடிநீர் சேவையைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு பெரிய அளவிலான தண்ணீரைப் படப்பிடிப்பிற்கு வழங்க முடியாது என மறுத்துவிட்டனர். இதனால் தற்போது படப்பிடிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, படக்குழுவினர் மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த மே மாதம் முழுவதுமே ஐதராபாத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது..

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்

திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்

தமிழக முதல்வர் விஜயின் நண்பரும் ‛மெட்டிஒலி, திருமதி செல்வம் போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவருமான நடிகர் சஞ்சீவ் சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛எனக்கும் முதல்வர்


திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி

திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி

ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம் 3 படம் வெளியாகி உள்ளது. முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இந்தபடம் இல்லை என்ற விமர்சனம் பொதுவாக எழுந்துள்ளது. அதேசமயம் படத்திற்கு வரவேற்பும்


‛கேஜிஎப்-3, சலார்-2 எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்

‛கேஜிஎப்-3, சலார்-2 எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் ‛சலார் என்ற படத்தை இயக்கியவர், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‛டிராகன் படத்தை


தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!

தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்!

‛பரியேறும் பெருமாள் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதன்பிறகு ‛கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். இந்நிலையில் கர்ணன் படத்தை


ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!

ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கருப்பு. அடுத்தடுத்து சூர்யா நடித்த படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map