என்றென்றும் புன்னகை தொடர் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் எக்ஸ் வில்லி!

என்றென்றும் புன்னகை தொடர் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் எக்ஸ் வில்லி!
Advertisement
எழுத்து அளவு

ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை தொடரில் புதிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் சுஷ்மா நாயர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை தொடர் 400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியல் நடிகை நீலிமா ராணி இந்த தொடரை தயாரித்து வருகிறார். நக்ஷத்திரா ஸ்ரீனிவாஸ், தீபக் குமார், நிதின் ஐயர், கவிதா உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வரும் இந்த தொடரில் புதிய கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் அறிமுகமாகிறார்.

நாயகி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த சுஷ்மா. சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சுஷ்மா மீண்டும் சின்னத்திரையில் நடிப்பாரா என பலரும் எதிர்பார்த்திருத்த நிலையில் ஜி தமிழ் சேனலில் கம்பேக் கொடுத்துள்ளார். என்றென்றும் புன்னகை குழுவினருடன் சுஷ்மா நாயர் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map