குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த கேரளாவைச் சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரி ஜோஸ் என்பவர், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் சென்னை நோக்கிப் பயணித்தார். ரயில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நிலையம் வந்தது. அப்போது, ஜோஸ் அசந்த நேரமாக பார்த்து, அவரது பையிலிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை அவர் அறிந்தார்.