உசிலம்பட்டி அருகே சோகம் - 3 பெண்களை வாரி சென்ற மின்னல் |Usilampatti|LightningStrike|RainDisaster
எழுத்து அளவு
அ-
அ+
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டி சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் பருத்தி தோட்டம் உள்ளது.
இன்று அங்கு பருத்தி எடுக்கும் பணி நடந்தது. அதில் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாலையில் அங்கு திடீரென மழை பெய்ய தொடங்கியதால், பணியாளர்கள் மழைக்கு ஒதுங்கினர்.
அருகே உள்ள புளியமரத்தின் அடியில் மழைக்கு ஒதுங்கிய போது மரத்தில் மின்னல் தாக்கியது.
அதில் ராமுத்தாய், தனிக்கொடி மற்றும் கணபதி என்ற 3 பெண்களுக்கும் ஸ்பாட்டிலேயே பரிதாபமாக இறந்தனர்.
வாசியம்மாளும் படுகாயமடைந்த நிலையில், உசிலம்பட்டி அரசு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
கருத்தை பதிவு செய்ய
கருத்துக்களை எழுதுங்கள்...
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.
மேலும் வீடியோ
Vasan
உயர் மின் கோபுரங்கள், அலை பேசி கோபுரங்கள் இல்லாத இடங்களில், மின்னல் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற, ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒன்று என்னும் விகிதத்தில், சுமார் 200 அடி உயரமுள்ள இடி தாங்கி கோபுரங்களை, தமிழக அரசு நிறுவ வேண்டும். இதனை "கார்பொரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி" என்னும் அடிப்படையில் அமைத்துக்கொடுக்க, கார்பொரேட் நிறுவனங்களும் முன் வரலாம், அரசாங்கத்தின் நிதி சுமையை பகிர்ந்து கொள்ளலாம். மழை மேகங்கள் கூடும் போது மக்கள் மரத்தடியில் சென்று தஞ்சமடையக்கூடாது. மக்களுக்கு விழிப்புணர்வு, மீண்டும் மீண்டும், கொடுக்க வேண்டும்.