வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோவை வன கோட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு விவசாயியும் தங்கள் பகுதியில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர். வன விலங்கு - மனித மோதலை தடுக்க வனத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். அப்போது பேசிய விவசாயி ராமசாமி, வனத்துறையினர் மீது குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார்.