திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்குமானது என மூச்சுக்கு முன்னுாறு முறை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் நடப்பதோ வேறு. நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு. நெல் கொள்முதல் செய்ய 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் மாமூல் வசூலிக்கும் கொடுமை. நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாததால் ரோட்டோரம், வயல்களில் பல லட்சம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து மீண்டும் முளைத்து வரும் அவலம்.