அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் பல்வேறு கோயில்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் திருச்சி கோயிலில் ஆய்வு செய்த அவர் பிரசாதங்களில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை என்பதை கண்டறிந்தார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில் பிரசாதங்களில் காலாவதி தேதி கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்தார். தொடர் ஆய்வின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு போனார்.