மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வணிக ரீதியான வாகனங்களில் சில குறிப்பிட்ட கருவிகளைப் பொருத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், வாகனம் இருக்கும் இடத்தை அறிய உதவும் ஜி.பி.எஸ் முக்கியமானவை. இதற்கு அடுத்து ஒளிரும் ஸ்டிக்கர்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இரவு நேரங்களில் விபத்துகளைத் தவிர்க்க வாகனங்களின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் இவை ஒட்டப்படும்.