சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

சின்னத்திரையில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே.. ..

சின்னத்திரையில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே.. ..
Advertisement
எழுத்து அளவு


தமிழ் சின்னத்திரையில் அழுத்தமான கதாபாத்திரம் மூலம் தனக்கென ரசிகர்களை கொண்டவர் நடிகை பிரேமி வெங்கட். செய்தி வாசிப்பாளராக பயணத்தை துவக்கிய இவர், சீரியல், வெப் தொடர்களில் நடித்து வருகிறார். சி ன்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்று செயற்குழு உறுப்பினராக உள்ளார். அவர் அளித்த பேட்டி...

சின்னத்திரையில் உங்கள் பயணம் எப்படி துவங்கியது செய்தி வாசிப்பாளராக இருந்த போது வாணி ராணி சீரியலில் நடிகை ராதிகாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சந்திரலேகா சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தேன். கண்மணி, சுந்தரி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட 15 சீரியல்களில் நடித்துள்ளேன். சின்னத்திரையில் சிறந்த வில்லி, சிறந்த அம்மா கதாபாத்திரத்திற்கு விருதுகளை பெற்றேன்.

பொங்கல் பண்டிகை என்றால் உங்கள் நினைவில் வருவது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீட்டின் மாடியில் பொங்கல் கொண்டாடுவோம். எனது மாமியார் வீட்டுக்கு சென்று கிராமத்தில் கொண்டாடும் போது பொங்கல் பண்டிகை உற்சாகமாக இருக்கும். மாட்டின் கொம்பில் வண்ணம் தீட்டுவது, பெண்கள் இணைந்து கோலமிடுவது என கோலாகலமாக இருக்கும். சமீப காலமாக வேலைப்பளு காரணமாக பண்டிகையின் போதும் குடும்பத்துடன் இருக்க முடியாத சூழல் உள்ளது.

தமிழ் சீரியல் நடிகர்கள் முன் உள்ள சவால்கள் தமிழ் சீரியலை பார்ப்பது பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் தமிழக கலைஞர்களுக்கு சவாலாக உள்ளது.

கன்னட சீரியல்களில் நடிப்பின் போதே குரல் பதிவு செய்வதால் கன்னட மொழி தெரிந்தவர்கள் தான் அதில் நடிக்க முடியும். ஆனால் தமிழில் குரலை தனியாக பதிவு செய்வதால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் நடிக்கும் வாய்ப்பு உள்ளது.

சிறிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் கூட தமிழக நடிகர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், தனது குழந்தையையும் வாழவைக்க வேண்டும்.

சமூக ஊடகம் நடிகர்களுக்கு சாதகமா? பாதகமா? சமூக ஊடகம் மூலம் பலர் அடையாளம் காணப்படுகின்றனர். சமூக ஊடகத்தில் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. தனிப்பட்ட நபர் குறித்து அவதுாறு பரப்புவது அதிகரித்துள்ளது. இது எங்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ரசிகர்களிடம் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு பெண்கள், இளைஞர்கள் என்னை பாராட்டுவது மேலும் முன்னோக்கி செல்ல துாண்டுகிறது. குறிப்பாக எனது கண்கள் ரொம்ப பிடிக்கும் என பலர் தெரிவித்தனர். நடிப்பின் போது எனது கண் செய்கை கதாபாத்திரத்துடன் ஒன்றிணைவதாக பலர் கூறியுள்ளனர். இதை எனது அம்மா கேட்கும் போது மகிழ்ச்சி அடைவார்.

உங்கள் அடுத்தகட்ட பயணம் புதிதாக நடிக்க வருபவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளித்து வருகிறேன். எதிர்காலத்தில் நடிப்பு பயிற்சி பள்ளி துவங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.


Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி

வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். மெட்ராஸ், மாரி, மாயா, கபாலி உள்பட


சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map