சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி…

சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி…
Advertisement
எழுத்து அளவு

பான் இந்தியா நடிகராக பிரபலமடைந்துள்ள தெலுங்கு நடிகர் பிரபாஸ், சென்னையில் பிறந்து, படித்து வளர்ந்தவர். 90கள் வரையிலும் தெலுங்குத் திரையுலகத்தின் மையமாக சென்னை தான் இருந்தது. அதனால், தெலுங்குத் திரையுலகினர் சென்னையில்தான் வசித்து வந்தனர். அதனால், வெங்கடேஷ், பிரபாஸ், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்கள் இங்குதான் படித்து வளர்ந்தனர்.

கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படமான "கபுள் பிரண்ட்லி" படக்குழுவினருடன் பிரபாஸ் உரையாடிய வீடியோவில் அவர் சென்னையைப் பற்றியும், தனது தமிழைப் பற்றியும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சென்னையுடன் எனக்கு மிகவும் சிறப்பான தொடர்பு உண்டு. நான் அங்கே பிறந்தேன், மற்றும் டான் பாஸ்கோ பள்ளியில் படித்தேன். எனவே, பல வழிகளில், சென்னையில் எனது வேர்கள் இருக்கும் இடம்.

இன்று வரை, சென்னை நகரத்துடன் உணர்ச்சி ரீதியாக இணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். நான் பின்னர் ஆந்திராவுக்கு மாறியிருக்கலாம், ஆனால் சென்னை எப்போதும் எனது ஒரு பகுதியாக இருக்கும். நான் சில வருடங்களாக தமிழைக் கொஞ்சம் மறந்துவிட்டேன், ஆனால், ராஜு மாஸ்டர், பிரபுதேவா மாஸ்டர், சேகர் மாஸ்டர் மற்றும் அம்மா ராஜசேகர் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த, எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் காரணமாக, நான் இன்னும் அடிக்கடி தமிழ் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், எனவே அவர்களுடன் பேசுவதால் மொழியுடன் இணைந்திருக்க உதவுகிறது. இல்லையெனில், நான் அதை முழுமையாக மறந்திருக்கலாம்.

சென்னைக்கு எப்போது சென்றாலும், எனது பள்ளியைப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். சில சமயங்களில் மக்கள், கலாச்சாரம், மொழி ஆகியவற்றுடன் உண்மையான சென்னையைத் தவறவிடுகிறேன். பள்ளியில் இருந்த போது, நாங்கள் அனைவரும் தினமும் தமிழில் பேசுவோம், எனவே அந்த தொடர்பு இன்னும் இருக்கிறது... இன்னும் என்னில் அந்தத் தமிழ் இருக்கிறது,” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

அது மட்டுமல்ல ஒரு முறை மும்பையில் படப்பிடிப்பில் இருந்த போது, சாப்பாடு சரியாக இல்லை என்பதற்காக படக்குழுவினர் அனைவருக்கும் சென்னை உணவை ஆர்டர் செய்து விமானத்தில் வரவழைத்து கொடுத்ததையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,

மேலும் படிக்க

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,

மேலும் படிக்க

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map