சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

வீண் வதந்தி பரப்புகிறார்கள்... நடிகர் சூரி வேதனை

வீண் வதந்தி பரப்புகிறார்கள்... நடிகர் சூரி வேதனை
Advertisement
எழுத்து அளவு

முன்னணி காமெடி நடிகராக இருந்து இப்போது கதையின் நாயகனாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சூரி. இவருக்கு சொந்தமாக மதுரையில் பல இடங்களில் அம்மன் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கிளையாக அரசு மருத்துவமனையிலும் ஒரு உணவகம் செயல்படுகிறது. மற்ற கிளைகளில் உள்ள உணவுகளின் விலையை விட இங்கு குறைவாக விற்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கி வந்தனர். இதனால் சில சண்டை, சச்சரவுகள், சுகாதார கேடுகள் எழுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவால் மருத்துவமனைக்கு உள்ளே சென்று தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு பொது மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்த நிலையில் இப்படி ஒரு தடை உத்தரவு வர காரணமே நடிகர் சூரி மற்றும் அவரது அம்மன் உணவு குழுவினர் என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை சூரி மறுத்துள்ளார்.

சூரி அளித்த பேட்டியில், அம்மன் ஹோட்டல் குழுமம் மீது நான்கு நாட்களாக தவறான ஒரு தகவல் பரப்பப்படுகிறது. எதனால் இந்த காழ்ப்புணர்ச்சி என தெரியவில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் சில தன்னார்வலர்கள் வழங்கும் அன்னதானத்தால் நாய்கள் சுற்றி திரிவது, உணவு வீணாவதால் சுகாதாரக் கேடு போன்ற இன்னும் சில பிரச்சனைகள் எழுந்ததால் மாவட்ட நிர்வாகமும், அரசு மருத்துவமனை நிர்வாகமும் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அன்னதானம் வழங்க தடை விதித்துள்ளது. ஆனால் மருத்துவமனைக்கு வெளியில் அன்னதானம் வழங்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தப் பிரச்சனைக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் சேவை நோக்கத்துக்காக திறக்கப்பட்ட அம்மன் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

என் அம்மா ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று விட்டு அங்கு சரியில்லாத உணவு வழங்கப்பட்டதால் காசு செலவை பார்க்காமல் அங்கு தரமான உணவு குறைந்த விலையில் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அரசு மருத்துவமனையில் ஹோட்டல் நடத்த நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதால் லாப நோக்கம் பார்க்காமல் குறைந்த விலையில் தரமான உணவு அங்கு வழங்கப்படுகிறது. தற்போது அங்கு மருந்து கொடுப்பவரும் சரி மருந்து எடுப்பவரும் சரி, டாக்டர்களும் நோயாளிகளும் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு எடுக்கின்றன.

அந்த அளவுக்கு சேவை மனப்பான்மையோடு உணவு வழங்கும் நான் மற்றவர்களுக்கு உணவு வழங்குவதை அம்மன் ஓட்டல் குழுமம் தடுக்குமா, இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சூரியன் ஓட்டல் என்ற ஒரே காரணத்திற்காக சிலர் வீணான வதந்திகளை கிளப்பி விடுகின்றனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் அன்னதான வழங்க தடை விதித்ததற்கும், எனக்கும் எந்த அளவு எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது மட்டுமே உண்மை.

இவ்வாறு சூரி தெரிவித்தார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை

தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை மிருணாள்

மேலும் படிக்க

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில்

மேலும் படிக்க

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

சினிமா துறையிலிருந்து வந்து இன்று தமிழகத்தின் முதல்வராகி உள்ளார் நடிகர் விஜய். அவர் பொறுப்பேற்றது முதல் பல துறையை சேர்ந்த பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map