சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

‛வட சென்னை 2... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல் டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம்

‛வட சென்னை 2... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல் டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம்
Advertisement
எழுத்து அளவு

வட சென்னை 2, தனுஷ் உடன் சண்டை, வாடிவாசல் டிராப் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஒரு வீடியோ மூலமாக தெளிவுப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதில் அவர் கூறியதாவது...

கடந்த சில நாட்களாக என்னை பற்றி, வட சென்னை பட விவகாரம் குறித்து, தனுஷ் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன. யு-டியூப்பில் சிலர் அதை கடுமையான மொழிகளில் சொல்லியிருக்கிறார்கள். அதனால், இந்த விளக்கம் விளக்கம் அளிக்கிறேன். என்னுடைய அடுத்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். சிம்பு நடிக்கிறார். ஆனால் அது வட சென்னை 2 படமல்ல. அதேசமயம் அந்த படக்கதை வட சென்னை பின்னணியில் நடக்கிறது.

வட சென்னை படத்தின் சில கேரக்டர்கள், பின்னணி அதில் வரலாம். வட சென்னை 2 என்பது கண்டிப்பாக தனுஷை வைத்துதான் உருவாக்க முடியும். வட சென்னை அன்பு கேரக்டர் எழுச்சி தனுஷ் தான் நடிக்க முடியும். காரணம், படத்தின் ரைட்ஸ் அவரிடம்தான் இருக்கிறது. வாடிவாசல் படத்துக்கு பல வேலைகள் பாக்கி என்பதால் அது தள்ளிப்போகிறது. தாணு தான் சிம்புவுடன் பேசுங்க என்றார். உடனே பேசினேன். இந்த பட வேலைகள் தொடங்கினேன்.

எனக்கும், தனுசுக்கும் இடையே வட சென்னை விஷயத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டை இல்லை. இது குறித்து அவரிடம் பேசியபோது கிரியேட்டராக நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை பண்ணுங்கள். வட சென்னை கதை விஷயத்தில், என் டீமுடன் பேசிவிட்டு, பணம் வாங்காமல் ஒப்புதல் தருகிறேன் என்றார்.

வட சென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் அவரிடம்தான் காப்பிரைட் உள்ளது. அவர் அந்த படத்தின் வேறு பாகம் எடுக்க பணம் கொடுங்கள் என்று கேட்பது சரியானது. நான் என் தரப்பு விஷயங்களை அவரிடம் பேசினேன். அவர் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. மேலும், சிம்புவுடன் நீங்கள் இணைந்தால் அந்த படம் நன்றாக இருக்கும், வித்தியாசமாக இருக்கும். சிம்புவுக்கும் புது அனுபவமாகக இருக்கும் என தனுஷ் உற்சாகம் கொடுத்தார்.

என்னுடைய பல பொருளாதார பிரச்னைகளில் தனுஷ் உதவி இருக்கிறார். சமீபத்தில் கூட உதவினார். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சிம்புவிடம் பேசியபோது வட சென்னை குறித்து பல தகவல்கள் வருகிறது. உங்களுக்கும், தனுசுக்கும் எந்த பிரச்னையும் வராதபடி படம் பண்ணுங்க. நீங்க சொல்கிற கதையில் நான் நடிக்கிறேன், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். சிம்புவும், தனுசும் நல்ல நட்பில் இருக்கிறார்கள்"" என்றார்.

இதனால், சில வாரங்களாக நிலவி வந்த வட சென்னை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி

அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்தனர். தேவராஜ் மோகன் இயக்கினார். இதில் அவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர்,

மேலும் படிக்க

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛மா இண்டி பங்காரம். ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் அஞ்சலி, சத்யராஜ், ஸ்ரீலட்சுமி,

மேலும் படிக்க

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ்

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான்

மேலும் படிக்க
Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map