பிறக்கும் முன்பே குழந்தை பெயர் வைத்த ஆல்யா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவிற்கும் திருமணமாகி ஏற்கனவே அய்லா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆல்யா பதிலளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டீர்களா? என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா பெண் குழந்தையாக இருந்தால் லைலா, ஆண் குழந்தையாக இருந்தார் அர்ஸ் என பெயர் வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஆல்யா தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். முன்னதாக பிரசவம் காரணமாக ஆல்யா சீரியலை விட்டு விலகுவாரா? என்ற ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா, சீரியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆல்யா தான் என பதிலளித்திருந்தார். ஆல்யாவின் ரசிகர்கள் அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்காக வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.