புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா என்ட்ரி : தேவயானி கண்ணீர் ஏன்?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் தேவயானி, வீஜே பார்வதி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அவ்வப்போது கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்/நடிகைகளை அழைத்து வருவது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த தொடரிலும் சிறப்பு தோற்றத்தில் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார்.
|
கதைப்படி, தற்போது தனது மருமகள் வேலைப்பார்க்கும் எப்.எம்-ல் லெட்சுமியும் (தேவயானி) பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், அங்கே இருக்கும் சி.இ.ஓவால் தொடர்ந்து அவமானப்படுத்தபடுகிறார். இந்நிலையில், அந்த எப்.எம்மிற்கு சிறப்பு விருந்தினராக வரும் வனிதா விஜயகுமார், லெட்சுமி கேட்கும் கேள்விகளால் கோபமடைகிறார். இதனால் வனிதா எப் எம்மில் சண்டையிடுகிறார். வனிதாவின் ரியாக்ஷனால் சீரியல் படி அழுவது தான் தேவயானியின் கதாபாத்திரம் என்றால் இந்த காட்சியின் போது நிஜமாகவே அழுதுவிட்டாராம் தேவயானி.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.