தேவயானி செஞ்சத மறக்கமாட்டேன் : நீபாவின் தாயார் நெகிழ்ச்சி
சின்னத்திரை நடிகை நீபாவின் தாயாரான மாலினி, நடிகை தேவயானி குறித்து நெகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். நீபாவின் தாய் மற்றும் தந்தையான மாலினி - வாமன் தம்பதியினர் சினிமாவில் டான்சராக பணிபுரிந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் வாமன் இறந்த பிறகு வாய்ப்புகள் இன்றி தவித்த மாலினி, தேவயானி - ராஜகுமாரன் தயாரித்து இயக்கிய காதலுடன் படத்தில் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அப்போது மாலினியை பார்த்த தேவயானி "நீங்க எவ்வளவு பெரிய உழைப்பாளி. உங்க அனுபவம் எங்களுக்கு தேவை. இவங்களுக்கு கண்டிப்பா வாய்ப்பு கொடுக்கணும்" என்று கணவரிடமும் சிபாரிசு செய்துள்ளார். இதன்மூலம் அந்த படத்தின் அனைத்து பாடல்களுக்கும் மாலினி டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார். இந்த நெகிழ்ச்சியான செய்தியை அண்மையில் மாலினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.