ஹிட் சீரியலை விட்டு விலகிய ப்ரீத்தி குமார்
"வானத்தைப் போல" தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் முதன் முதலில் ஹீரோ மற்றும் தங்கை ரோலில் நடித்து வந்த தமன் குமார், ஸ்வேதா கெல்கே திடீரென அடுத்தடுத்து சீரியலை விட்டு விலகினர். தற்போது அந்த ரோல்களில் ஸ்ரீகுமார் மற்றும் மான்யா நடித்து வருகின்றனர். ஹீரோ சின்னராசுவின் திருமணத்தை வைத்து சீரியல் டிஆர்பியும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொன்னி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ப்ரீத்தி குமார் சீரியலை விட்டு விலகியுள்ளார். இத்துடன் இந்த சீரியலில் நடித்த மூன்று முக்கிய நடிகர்கள் சீரியலை விட்டு வெளியேறி விட்டனர். அவர் விலகியதற்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், சாந்தினி பிரகாஷ் இனி பொன்னியாக தொடர்வார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
சாந்தினி பிரகாஷூம் நல்ல நடிகை தான் ஆனால், பொன்னி கேரக்டருக்கு ப்ரீத்தி குமார் நல்ல பொருத்தமாக இருந்தார் என சீரியல் நேயர்கள் புலம்பி வருகின்றனர். ஸ்ரீகுமார், மான்யாவை போல சாந்தினியும் கேரக்டரை பிடித்துக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.