சின்னதிரையில் சீரியலில் சினேகன்
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் சினேகன். "யோகி" படத்தின் மூலம் நடிகர் ஆனார். படம் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு "உயர்திரு 420" என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். இந்த படமும் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு சில படங்களில் நடித்தார், சில படங்கள் வெளிவரவில்லை. வெளிவந்த படங்கள் வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தினார். "பிக் பாஸ்" நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் அவர் சின்னத்திரை தொடர் ஒன்றில் நாயகனாக நடிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. "பவித்ரா" என்ற பெயரில் உருவாகும் இந்த தொடரில் டைட்டில் கேரக்டரில் பவித்ராவாக அனிதா சம்பத் நடிக்கிறார். அவரது ஜோடியாக சினேகன் நடிக்கிறார். இந்த தொடரை பிரியன் என்பவர் இயக்குகிறர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. சினேகன் சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.