மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான பூமி பூஜை நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையிலோ மேகதாது திட்டம் அனுமதிக்கப்படவில்லை.