நம் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் உள்ளனர். எனினும், ஏற்கனவே தேங்கிக் கிடக்கும் வழக்கு விசாரணைகள், நாளுக்கு நாள் பதிவாகும் புதிய வழக்குகளை விசாரிக்க இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே, வழக்குகளை விரைந்து முடிக்கவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் ஏதுவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்தது.