சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

கடவுள் கொடுத்த பரிசு சிரிப்பு: பவுசி பளிச்

கடவுள் கொடுத்த பரிசு சிரிப்பு: பவுசி பளிச்
Advertisement
எழுத்து அளவு
"சிரிக்காதே... சிரிக்காதே... சிரிப்பாலே மயக்காதே... அடிக்காதே.. அடிக்காதே... அழகாலே அடிக்காதே..."என ரசிகர்கள் பாடும் அளவிற்கு அழகால் கவர்ந்து இழுக்கிறார் "டாடா" பட நடிகையான சேலத்தை சேர்ந்த பவுசி."டிவி" தொடர்களில் நடித்து வரும் இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக கூறியதாவது: வீட்டில் நான் செல்லப்பொண்ணு. அப்பா தொழிலதிபர். சிறுவயதிலிருந்தே நடிகையாக ஆசை இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தேன். என் ஆசை குறித்து பள்ளிப்பருவத்தில் இருக்கும் போதே குடும்பத்தில் சொல்லியிருந்தேன். அப்போது அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படிக்க சேர்ந்தேன். என் தோழி ஒருவரது உறவினர் பியூட்டி பார்லர் கடை திறப்பு விழாவை விளம்பரப்படுத்தும் விதமாக, மாடல் அழகிகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தி பேனர்களில் பதிவிட நினைத்தார். அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆர்வமாக கலந்து கொண்டேன். அது என் சினிமா வாழ்வின் தொடக்கம். பின் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்கள் என்னை போட்டோ ஷூட் எடுக்க வருவார்கள். எனக்கும் விருப்பம் இருந்ததால் ஆர்வமாகபங்கேற்றேன்.இப்படியே வாழ்க்கை சென்றபோது சினிமாவில் காஸ்டியூமராக இருக்கும் தோழி ஒருவரது மூலமாக "தட்றோம் துாக்றோம்" படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நல்ல முறையில் நடித்தேன். கொரோனா காலம் முடிந்தபின் படம் வெளியானது. அதை பார்த்து சீரியல் இயக்குநர் ஒருவர் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியலில் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தொடர்ச்சியாக "கோகுலத்தில் சீதை", "சிவா மனசுல சக்தி" உள்ளிட்ட 7 சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.என் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்தது. கவின் நடித்த "டாடா"படத்தில் சாதனா கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்பின் "இந்திரா" சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினேன். அதுவும் மக்களிடம் வரவேற்பை பெற்று தந்தது. சீரியலில் நடிக்கும் போது மூத்த நடிகை நளினியுடன் பழகிய நாட்களை என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக கருதுகிறேன். நான் மனச்சோர்வாக இருக்கும் போது அவர் என்னை ஊக்கப்படுத்தி ஆதரவாக பேசி அரவணைத்து கொள்வார்.பட வாய்ப்புகளுக்காக பல ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளேன். என் திறமையை வெளிக்காட்டியும் தேர்வாகாமல் புறக்கணிக்கப்பட்டதுண்டு. அதுபோன்ற நேரங்களில் வருத்தமாக இருக்கும். பிறகு என்னை நானே ஊக்கப்படுத்தி கொள்வேன். நம்முடைய கடமையை சரியாக செய்தால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதை தெரிந்து கொண்டேன்.பலரும் வளர்ந்ததும் கடந்து வந்த பாதையை மறந்து விடுகின்றனர். அவ்வாறு இருக்க கூடாது. எந்தநிலை சென்றாலும் வந்த நிலை மறக்ககூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறேன். சினிமா வாய்ப்புகளும் வருகிறது. எனக்கான கதையை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும். இயற்கையாகவே கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக என் அழகிய சிரிப்பை நினைக்கிறேன் என்றார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

நட்சத்திரங்களின் பேட்டி

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

சாதிக்க துடிக்கும் சங்கரவேல்!

கொடுவா மீசையும், பஞ்சு போன்ற பொசு பொசு தாடியும்தான் இவரது அடையாளம். பணி ஓய்வுக்கு முன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தவர், இன்று நடிப்பதற்காக சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன கேரக்டரில்


மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மாடர்ன் வில்லி மகாலட்சுமி

மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி. பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம்


எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எதிர்காலத்தில் சைபர் விசா எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து, தனக்கென தனிபாதையில் இலக்கிய பணியாற்றி வருபவர். சினிமாவில் பாடலாசிரியராக, இளைஞர்களின் ரிங்டோனாக அவரின் எழுத்துக்கள் ஒலிக்கின்றன. ஆகோள் எனும்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2025 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map