சரண்யா மோகனிடம் சிம்பு பரத நாட்டியம் கற்றுக்கொண்டது எப்படி

சரண்யா மோகனிடம் சிம்பு பரத நாட்டியம் கற்றுக்கொண்டது எப்படி
Advertisement
எழுத்து அளவு

சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு தனது எடைக்குறைப்பு பயண வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். உடற்பயிற்சி, யோகா, நடனம் என பல பயிற்சிகளை மேற்கொண்டு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை 72 கிலோவாக குறைதுள்ளார் சிம்பு. இதற்காக 2020ல் லாக்டவுன் சமயத்தில் கேரளா சென்ற சிம்பு, பயிற்சியின் ஒரு பகுதியாக பரதநாட்டியத்தையும் கற்றுகொண்டு வந்துள்ளார். சிம்புவுக்கு குருவாக இருந்து இதை கற்றுக்கொடுத்தவர் நடிகை சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, வேலாயுதம் படங்களில் தங்கையாக நடித்தாரே அவரே தான். சிம்புவுடனும் ஒஸ்தி என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பல் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் சரண்யா மோகன். எடைக்குறைப்புக்காக கேரளாவிற்கு சென்ற சிம்புவுக்கு ஒருமுறை சிகிச்சை அளிப்பதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சரண்யாவின் கணவர் சென்றிருந்தார். அதன்பின் ஒருமுறை அவரது கிளினிக்கிற்கு சிம்பு வந்தபோது, அங்கே தனது கணவரை பார்ப்பதற்காக சரண்யாவும் வந்துள்ளார். அங்கே அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டு போன சிம்பு, பேச்சுவாக்கில் பரதநாட்டியம் கற்றுத்தர யாரையாவது சிபாரிசு செய்யுமாறும் கேட்டுள்ளார்.. ஆனால் கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த சமயத்தில் தோதான நபர்கள் கிடைக்கவில்லை.

அதனால் தானே குருவாக மாறி களத்தில் இறங்கி விட்டார் சரண்யா மோகன்.. தினசரி ஒருமணி நேர பயிற்சி என கிட்டத்தட்ட இரண்டு வாரம் சிம்புவுக்கு பரதநாட்டிய பயிற்சி அளித்துள்ளார்.. சிம்புவுக்கு நடனம் எளிதான விஷயம் என்பதால் பரதநாட்டியத்தின் ஒவ்வொரு படியையும் விரைவிலேயே கற்றுக்கொண்டாராம். அதன்பிறகு சில நாட்கள் கழித்து, சரண்யா மோகன் வீட்டிற்கு துணிகள், இனிப்பு மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் என நிறைய பரிசுப்பொருட்களை தனது தரப்பு நபர்கள் மூலம் அனுப்பி வைத்தாராம் சிம்பு..

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

கோலிவுட் செய்திகள்

இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்

இயக்குனர் சேரனின் தாயார் காலமானார்

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல வெற்றி படங்களை எடுத்தவர் இயக்குனர் சேரன். ஏராளமா படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாயார் கமலா பாண்டியன், 84, காலமானார். வயது


கார்த்தி 30 துவங்கியது

கார்த்தி 30 துவங்கியது

தமிழில் சர்தார் 2, மார்ஷல் படங்களில் நடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக தெலுங்கில் மேட் என்ற படத்தை இயக்கிய கல்யான் சங்கருடன் இணைந்திருக்கிறார். இது கார்த்தியின் 30-வது படமாக


இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா?

இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா?

முதல்வர் விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வர வேண்டிய ஜனநாயகன் படம் இன்னமும் வரவில்லை. ஒவ்வொருமுறையும் மறைமுகமாக ரிலீஸ் தேதி சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில் அது ரத்தாகிறது. காரணம்,


கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி

கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி

கேரளாவில் உள்ள சில பல்கலைக் கழகங்கள் டி.லிட் என அழைக்கப்படும் கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கி வருகின்றன. இலக்கியம், கலை, கலாசாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் சிறந்த பங்களிப்பு


25 ஆண்டுகளை நிறைவு செய்த ஆனந்தம்

25 ஆண்டுகளை நிறைவு செய்த ஆனந்தம்

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்குனராக அறிமுகமாக, மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா மற்றும் பலர் நடிப்பில் 2001ம் ஆண்டு மே 25ம் தேதி வெளியான படம் ஆனந்தம்.

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map