எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ்

எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ்
Advertisement
எழுத்து அளவு

கடந்த டிசம்பர் 12ம் தேதி தனது 15 ஆண்டு காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்கு பிறகும் தான் நடித்த படங்களின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், கணவருடன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்கு சென்று விட்டு திரும்பினார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது வாழ்க்கை குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், திருமணத்திற்கு முன்பு நானும் ஆண்டனியும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். அதனால் இப்போது பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. அதோடு நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் மூழ்கி இருப்பேன். அது எனது கணவருக்கு சங்கடமாக உள்ளது. என்றாலும் அவர் அதை குற்றம் குறை சொல்வதில்லை. என்னை புரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்கிறார். அதனால் எங்களது குடும்ப வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக செல்லும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map